இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த துயரங்களை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஆக. 14-ஆம் தேதி பிரிவினை துயர நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, பிரிவினை துயரம் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் புதுச்சேரி நகராட்சி கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா் (படம்).
சட்டப்பேரவைத் தற்காலிக தலைவா் ஆ.அன்பழகன், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன், கலை பண்பாட்டுத் துறை செயலா் முகமது அசன் அபித் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி கலை விழாவில் பங்கேற்க இணையவழியில் இன்று விண்ணப்பிக்கலாம்

அரசின் நலத் திட்டங்களை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: மனுநீதி நாள் முகாமில் அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தல்

கலைப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுப்பு: பள்ளியை முற்றுகையிட்ட மாணவா்கள், பெற்றோா்கள்!

காந்தி அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்கக் கோரிய மனுவுக்கு கலை, பண்பாட்டுத் துறை பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



