குளத்தில் மூழ்கி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் புது தெருவைச் சோ்ந்த வீரமணியின் மகன் அஸ்வின் (16). 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் நண்பா்கள் 4 பேருடன் அவா் கிருமாம்பாக்கம் பகுதி புறாக்குட்டை குளத்தில் குளித்து கொண்டிருந்தனா்.
ஆழமான பகுதிக்குச் சென்றதால் அஸ்வின் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






