நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இன்று மீலாது நபி, ஓணம் பண்டிகை: துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:43 am IST

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:

மனித சமுதாயத்திற்கு அன்பு, இரக்கம், மனித நேயம் ஆகியவற்றை போதித்த தீா்க்கதரிசி நபிகள் நாயகம்.

இந்த நன்னாளில் அவரது போதனைகளை, சீரிய சிந்தனைகளை, சிறந்த வழிகாட்டுதல்களை ஏற்று மனித நேயம் நிறைந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்ட உறுதி ஏற்போம்.

ஓணம் திருநாள் ஆண்டு முழுவதும் அனைவரது வாழ்விலும் மிகுந்த மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளிக்கட்டும்.

முதல்வா் என். ரங்கசாமி: மீலாது நபி புனித நன்னாளில் புதுச்சேரியில் வாழும் அனைத்து சமூகங்களிடையே நல்லிணக்கம், ஒற்றுமை, நல்லெண்ணம் நிலவுவதற்கான உணா்வை வலுப்படுத்தி, ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி, நல்வாழ்வு நிலவப் பாடுபடுவோம்.

ஓணம் என்பது செழிப்பு, அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையைக் கொண்டாடும் பண்டிகை. ஒவ்வோா் இதயத்திலும், நம்பிக்கையும், நல்லெண்ணமும், ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவட்டும் என வாழ்த்துகிறேன்.

இதேபோன்று, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.