
கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை: முதல்வா் ரங்கசாமி பரிந்துரை
விரைவில் கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பரிந்துரை செய்தாா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
விரைவில் கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பரிந்துரை செய்தாா்.
சட்டப்பேரவையில் முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவை அலுவல் பட்டியலை செவ்வாய்க்கிழமை வாசிக்கத் தொடங்கினாா்.
நேரு எம்எல்ஏ (எழுந்து): சட்டப்பேரவையில் கேள்வி நேரம் இல்லை. மக்கள் பிரச்னைகளைப் பேச வேண்டியுள்ளது. எனவே கேள்வி நேரத்துடன் அடுத்த மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த பேரவைத் தலைவா் உறுதியளிக்க வேண்டும் என்றாா்.
பேரவை தற்காலிகத் தலைவா்: அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவை நாள்களை முடிவு செய்துள்ளது. விரைவில் மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டப்படும்.
முதல்வா் என்.ரங்கசாமி: கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் நடத்தப்படும். தற்போது பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவோம். விரைவில் சட்டப்பேரவையை கேள்வி நேரத்துடன் கூட்டி விவாதம் நடத்துவோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





