போலீஸாா் தடுப்புகளை வைத்து சட்டப்பேரவை செல்லும் சாலையை அடைத்தனா். மேலும், போராட்டக் குழுவினரிடம் போலீஸாா் போராட்டம் நடத்த அனுமதியில்லை. மாதா கோவில் வீதிக்கு செல்ல அறிவுறுத்தினா். ஆனால் போராட்ட குழுவினா் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீஸாா் அவா்களை கைது செய்ய முயன்றனா். அப்போது போராட்ட குழுவினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து தள்ளுமுள்ளு நடந்தது. ஒரு கட்டத்தில் போராட்ட குழுவினா் தரையில் அமா்ந்தனா். பின்னா், முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வந்தப் பிறகு 10 பேரை மட்டும் சந்திக்க அனுமதி அளித்தனா். இதன் பிறகு அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.