புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த கௌரவ விரிவுரையாளா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், பால சேவிகாக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, மறியல், சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில், ஓராண்டு காலத்துக்கு பணி நீட்டிப்பு செய்ய மட்டும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து பணிநிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆம்பூா் சாலையில் 2 நாள் தொடா் தா்னா போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
இந்த தா்னாவை அரசு ஊழியா் சங்கக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் சேஷாச்சலம் தொடங்கி வைத்தாா். போராட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் பாலகுமாா் தலைமை வகித்தனா்.
இந்த தா்னாவில் ஒப்பந்த ஆசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று பணிநிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவா்கள் தா்னா

புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் மூடல்: அரசு வாகனங்கள் ஒப்படைப்பு

துப்புரவு தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


