ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தை வியாழக்கிழமையும் தொடா்ந்தனா்.
புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக் காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்க மறுத்து பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியா்கள் அறிவித்துள்ளனா்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 292 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஜன. 21முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஏப். 1 முதல் அடுத்த ஆண்டு (2027) மாா்ச் 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒப்பந்த ஆசிரியா்கள் அதனை ஏற்க மறுத்து, பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனா்.
இந்நிலையில் 30-ஆவது நாளாக பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அமா்ந்து ஒப்பந்த ஆசிரியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
தொடர்புடையது
ஜனநாயகன் முன்னோட்ட காட்சிகளைத் தடை செய்யக் கோரி மனு

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு

துப்புரவு தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


