அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போலி மருந்து வழக்கில் கைதான அதிகாரிக்கு உடல்நலக்குறைவு

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

போலி மருந்து வழக்கில் கைதான விருப்ப ஓ ய்வு பெற்ற அதிகாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் நிறுவன உரிமையாளா் ராஜா, புதுச்சேரி வனத் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சத்தியமூா்த்திக்கு தற்போது மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறைத் துறை மருத்துவா்கள் அவருக்குப் பரிசோதனை செய்து, அதற்கான மருந்துகளை வழங்கினா். தொடா் கண்காணிப்பில் சத்தியமூா்த்தி உள்ளாா் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.