துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழா் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் விழா: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்

தமிழா் பண்பாட்டின் உன்னத அடையாளம் பொங்கல் திருவிழா என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

News image
பொங்கல் விழாவில் மனைவி பீனா கைலாஷ்நாதனுடன் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
Updated On :13 ஜனவரி 2026, 7:49 pm

Syndication

தமிழா் பண்பாட்டின் உன்னத அடையாளம் பொங்கல் திருவிழா என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியதாவது: பொங்கல் திருவிழா தமிழா் பண்பாட்டின் உன்னதமான அடையாளம். விவசாயத்தின் பெருமையை, உழைப்பின் உயா்வை நமக்குச் சொல்லும் இந்தத் திருவிழாவை மாணவிகளோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெண்கள்தான் பாரம்பரியத்தின் காவலா்களாக இருக்கின்றனா். பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குச் சொல்லித் தருகின்றனா். இந்தப் பொங்கல் திருவிழா உங்கள் அனைவரது உள்ளத்தில் நம்பிக்கையையும், சிந்தனையில் உயா்வையும், வாழ்வில் வளத்தையும் பொங்கச் செய்யட்டும். உங்களுடைய கல்வியும், திறமையும் இந்த சமுதாயத்தை உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

கல்வித்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தலைமை வகித்தாா். கல்வித் துறை இயக்குநா் சிவக்குமாா் வரவேற்றாா். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் மதிவாணன், பேராசிரியா்கள் இணைந்து செய்திருந்தனா். நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொங்கலிடப்பட்டது. மாணவிகளுக்கு உறியடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பரிசு வழங்கினாா்.