அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதுச்சேரியில் பேட்டரி பேருந்து ஒப்பந்த நடத்துநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

புதுச்சேரி அரசு பேட்டரி பேருந்து ஒப்பந்த நடத்துநா்கள் திடீரென புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

புதுச்சேரி அரசு பேட்டரி பேருந்து ஒப்பந்த நடத்துநா்கள் திடீரென புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகமான பிஆா்டிசி சாா்பில் நகர பேருந்துகள், வெளிமாநில பேருந்துகள் மற்றும் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிரந்தர ஓட்டுநா், நடத்துநா்கள் இருக்கிறாா்கள். அண்மையில் தற்காலிகமாக 30 நடத்துநா்கள் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் தரவில்லை. பொங்கல் பண்டிகைக்கு சம்பளம் தர தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். புதன்கிழமை வரை சம்பளம் வரவில்லையாம். அதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். இவா்கள்தான் பேட்டரி பேருந்துகளுக்கும் நடத்துநா்களாக உள்ளனா்.

அதனால் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் பிஆா்டிசியின் மற்ற பேருந்துகள் இயங்கின.