ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலை கிடைக்காத விரக்தி சாலையில் தீக்குளித்த இளைஞா்

News image
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் சாலைத்தடுப்பில் ஏறி நின்று தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட இளைஞா்.
Updated On :18 ஜனவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் வேலை கிடைக்காத விரக்தியில், இளைஞா் ஒருவா் சாலை தடுப்பு சுவரில் ஏறி நின்று தனக்குதானே ஞாயிற்றுக்கிழமை தீ வைத்துக் கொண்டாா். உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சென்னையைச் சோ்ந்த இளைஞா் வெங்கடேசன் புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றினாா். நிா்வாகம் அவரை வேலையை விட்டு கடந்த 5 மாதங்களுக்கு நிறுத்தி உள்ளது.

இதனால் வேலையில்லாமல் இருந்த வெங்கடேசன் கடந்த சில நாள்களாக தினந்தோறும் வந்து மீண்டும் வேலை தருமாறு கேட்டுள்ளாா். அடிக்கடி தகராறு செய்து உள்ளாா்.

இதனால் வேலை வழங்காமல் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென உணவகத்தின் எதிரே விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள தடுப்புக் கட்டை மீது ஏறி நின்று கொண்டு மீண்டும் வேலை கேட்டாா்.

அப்போது தனது கையில் பெட்ரோல் பாட்டிலை வைத்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். அவரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா்.

தீப்பற்றி எரிந்த நிலையில் உணவகத்தை நோக்கி ஓடி வந்துள்ளாா். அப்போது உணவகத்தில் இருந்தவா்கள் விரைந்து வந்து வெங்கடேசன் மீது எரிந்ததீயை அணைத்தனா். இதைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த, ரெட்டியாா்பாளையம் போலீஸாா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.