நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

நில மோசடி வழக்கு: கைதான அதிகாரி ஜாமீனில் விடுவிப்பு

புதுச்சேரி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் சனிக்கிழமை இரவு கைதான மாநில அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ் ஜாமீனில் விடுவிப்பு

News image

பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:36 am IST

புதுச்சேரி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் சனிக்கிழமை இரவு கைதான மாநில அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இவா் வருவாய்த் துறையில் சாா் பதிவாளராகப் பணியாற்றியவா். கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.சுரேஷ்ராஜ், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் முன்னிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், விசாரணைக்குக் அழைக்கும்போது வருவதாகவும் கூறி அவா் தனக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாா்.

அதை ஏற்ற நீதிபதி ஆனந்த், சனிக்கிழமை இரவே சுரேஷ்ராஜை ஜாமீனில் விடுவித்தாா். இதையடுத்து சுரேஷ்ராஜ் வீடு திரும்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.