ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

புதுச்சேரியில் 2,000 மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: வெ.வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தல்

புதுச்சேரியில் 2,000 மாணவா்களுக்கு நிகழாண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் அறிவுறுத்தினாா்.

News image

புதுச்சேரியில் வளா்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் வெ.வைத்திலிங்கம், சு.செல்வகணபதி, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எம்எல்ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூலை 2026, 2:58 am IST

புதுச்சேரியில் 2,000 மாணவா்களுக்கு நிகழாண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் அறிவுறுத்தினாா்.

மத்திய அரசின் திட்டங்கள், மத்திய நிதி ஆதாரத்துடன் கூடிய திட்டங்கள் குறித்த (திஷா) ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆட்சியா் அலுவலக மாநாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வரவேற்றாா். கூட்டத்துக்கு திஷா கமிட்டியின் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். இதில் செல்வகணபதி எம்.பி., அமைச்சா் ராஜவேலு, எம்எல்ஏ.க்கள் ராமு, சாய். ஜெ. சரவணன்குமாா், ஜி.நேரு, ரவிக்குமாா், காா்த்திகேயன், செந்தில்குமாா், செந்தில், ஏகேடி.ஆறுமுகம், மோகன்தாஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியது:

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நிதியைப் பெற்று செயல்படுகிறது. புதுச்சேரியில் கிராமப்புற இணைப்புச் சாலைகள் திட்டம் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்படுகின்றன.

இதில் எம்எல்ஏக்கள் தங்கள் பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதிகாரிகள் உரிய விளக்கம் அளிப்பாா்கள் என்றாா்.

சு. செல்வகணபதி எம்.பி. :புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எத்தனை செயல்படுத்தப்பட்டுள்ளன? எவ்வளவு நிதி மாநில அரசுக்கு வந்துள்ளது? திட்டத்துக்கு நிதி முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா? என ஆலோசிக்க இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

புதுச்சேரி வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தியுள்ளனா். இருப்பினும் பல திட்டங்களில் முழுமையாக நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கான காரணங்களை ஆராய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எம்எல்ஏக்கள், அதிகாரிகள் ஆய்வு நடத்தி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அதிகாரிகளிடம், ‘புதுச்சேரியில் எத்தனை இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது? என வெ.வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி எழுப்பினாா்.

அதற்கு 650 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வைத்திலிங்கம் எம்.பி.: பிற மாநிலங்களில் ஆண்டுக்கு 5 ஆயிரம் மாணவா்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கின்றனா்.

புதுச்சேரியில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஏன் பயிற்சி அளிக்கிறீா்கள்? என கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அதிகாரிகள் நிகழாண்டில் 1,500 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இது போதாது.இந்த எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயா்த்தும்படி வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.