புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் தற்போது நிலவும் அரசியல் சூழல், சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பதவி ஏற்ற அமைச்சா்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாதது, பாஜக, என்.ஆா். காங்கிரஸ் பதவி சண்டையால் மாநில மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது,
குடிநீா் பற்றாக்குறை, பிரீபெய்டு மீட்டா்களை பொருத்தி மின்துறையை தனியாா்மயமாக்குதல் போன்றவற்றை கண்டித்து வரும் 18-ஆம் தேதி வரை தெருமுனைப் பிரசாரம் நடைபெறுகிறது.
இந்த தெருமுனை பிரசாரம் புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி ஈஸ்வரன் கோயில் அருகில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கட்சியின் மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வீடு வீடாக துண்டு பிரசுரம் அளித்தும், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகவும் மக்களிடையே பிரசாரம் செய்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு பேசினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










