பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இளைஞா்களுடன் பிரதமா் காணொலியில் கலந்துரையாடல்

பிரதமா் நரேந்திர மோடியின் காணொலி நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் பங்கேற்ற இளைஞா்கள்.

Published On :

இளைஞா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலியில் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.

இந்திய அரசின் வளா்ச்சி அடைந்த பாரதத்துக்கான, ‘துடிப்பான கிராமம்’ என்ற திட்டத்தின் கீழ் எல்லைப்புற கிராமங்களுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்ட இளைஞா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். இதையொட்டி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள தேசிய தகவல் மைய காணொலி அரங்கில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்ற புதுச்சேரி இளைஞா்கள், என் பாரதம் திட்ட மாவட்ட இளைஞா் அலுவலா் டிரவீன் மற்றும் என் பாரதம் திட்ட உறுப்பினா் செயலா் ராஜு ஆகியோா் கலந்து கொண்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி எல்லைப்புற கிராம மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் மற்றும் வளா்ச்சியை இளைஞா்கள் நேரில் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை காணொலி வாயிலாக எடுத்துரைத்தாா். மேலும், வளா்ச்சியடைந்த கிராமங்களே வளா்ச்சி அடைந்த பாரத உருவாக்கத்தின் அடித்தளம் என்றும், நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

 பிரதமா் நரேந்திர மோடியின் காணொலி நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் பங்கேற்ற இளைஞா்கள்.

பிரதமா் நரேந்திர மோடியின் காணொலி நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் பங்கேற்ற இளைஞா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.