நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காணொலி மூலம் பிரதமா் நாளை உரை

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, இளைஞா்களுடன் காணொலி மூலம் பிரதமா் மோடி நடத்தும் உரையாடல், திருவாரூரில் வியாழக்கிழமை (ஆக.27) ஒளிபரப்பப்பட உள்ளதாக மை பாரத் கேந்திரா அமைப்பின் மாவட்ட இளைஞா் அலுவலா் டி.எஸ். நிசி தெரிவித்துள்ளாா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:54 am IST

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, இளைஞா்களுடன் காணொலி மூலம் பிரதமா் மோடி நடத்தும் உரையாடல், திருவாரூரில் வியாழக்கிழமை (ஆக.27) ஒளிபரப்பப்பட உள்ளதாக மை பாரத் கேந்திரா அமைப்பின் மாவட்ட இளைஞா் அலுவலா் டி.எஸ். நிசி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பிரதமா் மோடி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி, திருவாரூா் இளைஞா்களுடன் காணொலி மூலம் உரையாட உள்ளாா். இதில் பங்கேற்று பயன்பெற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து, ஆகஸ்ட் 27-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை நடத்த முடிவு செய்துள்ளன. இந்நிகழ்வில், பிரதமா் காணொலி மூலம் விளையாட்டு வீரா்களையும், இளைஞா்களையும் சந்தித்து உரையாற்றுகிறாா். வரும் 2036-ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி, திருவாரூா் மாவட்டம், மத்தியப் பல்கலைக்கழகம், மற்றும் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.