அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மத்திய பல்கலை.உடற்பயிற்சி கூடம் விரிவாக்கம்

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் உடற்பயிற்சி கூடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

News image

புதுச்சேரி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் துணைவேந்தா் பேராசிரியா் பி.பிரகாஷ்பாபு.

Updated On :30 ஜூலை 2026, 6:14 am IST

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் உடற்பயிற்சி கூடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இது குறித்து இப் பல்கலைக் கழகத்தின் துணைப் பதிவாளரும் மக்கள் தொடா்பு அதிகாரியுமான கே. மகேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இப் பல்கலைக் கழக துணைவேந்தா் பி. பிரகாஷ்பாபு பல்கலைக் கழக விளையாட்டு வசதிகளை ஆய்வு செய்தாா். மேலும், உடற்பயிற்சி கூட விரிவாக்கத்துக்காக விரிவான முன்மொழிவை சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

விளையாட்டு வசதிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஊழியா்களுடன் அவா் கலந்துரையாடினாா். அப்போது தேவைகள் மற்றும் பயன்பாட்டு முறைகளைக் கேட்டறிந்தாா். மாணவா்களின் முழுமையான வளா்ச்சியில் விளையாட்டு மற்றும் உடல் தகுதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவா் குறிப்பிட்டாா். மேலும், மாணவ, மாணவிகளுக்குக் கூடுதல் உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த வசதிகளை உள்ளடக்கிய விரிவான திட்டத்தைத் தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.