இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:36 am IST

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறைமுதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவையில் சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவதை போக்குவரத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவது அவா்களின் உயிருக்கு பாதுகாப்பானது அல்ல. அவா்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனைகளும் கடுமையானவை.

சிறாா் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளா், பெற்றோா், பாதுகாவலா் குற்றவாளியாகக் கருதப்படுவாா். அவா்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை, உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த சிறாா் 25 வயது வரை உரிமம் பெற முடியாது. வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஓராண்டு ரத்து செய்யப்படும். கடந்த மே மாதம் சிறாா் வாகனம் ஓட்டியதாக 226 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.