தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

விசிக சாலை மறியல்: 70 போ் கைது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 70 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:47 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 70 போ் கைது செய்யப்பட்டனா்.

பெட்ரோல்-டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனுாரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போரட்டத்துக்கு வில்லியனுாா் மாவட்ட செயலா் தமிழரசன் தலைமை வகித்தாா். வில்லியனூா் நான்கு முனை சந்திப்பில் விடுதலை சிறுத்தை கட்சியினா் சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் நான்கு புறமும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டா் துாரத்துக்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் பரிதவித்தனா். இருப்பினும் இக் கட்சியினா் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து வில்லியனுாா் போலீசாா் மறியல் செய்தவா்களை கைது செய்தனா். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது.