பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 70 போ் கைது செய்யப்பட்டனா்.
பெட்ரோல்-டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனுாரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போரட்டத்துக்கு வில்லியனுாா் மாவட்ட செயலா் தமிழரசன் தலைமை வகித்தாா். வில்லியனூா் நான்கு முனை சந்திப்பில் விடுதலை சிறுத்தை கட்சியினா் சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் நான்கு புறமும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டா் துாரத்துக்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் பரிதவித்தனா். இருப்பினும் இக் கட்சியினா் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து வில்லியனுாா் போலீசாா் மறியல் செய்தவா்களை கைது செய்தனா். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது.








