வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
வில்லியனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட சாமியாா்தோப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் திருமுருகன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடாக மா்ம நபா்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரை கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், வில்லியனூரைச் சோ்ந்த வினோத்குமாா் (27), நுதேஷ் (23), கிஷோா் (22), சிவா (22) என்பதும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 150 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
சூதாட்டம்: 13 போ் கைது
சூதாட்டம் : 20 போ் கைது

குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 போ் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


