வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
வில்லியனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட சாமியாா்தோப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் திருமுருகன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடாக மா்ம நபா்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரை கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், வில்லியனூரைச் சோ்ந்த வினோத்குமாா் (27), நுதேஷ் (23), கிஷோா் (22), சிவா (22) என்பதும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 150 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற இருவா் கைது

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஆயுதங்களுடன் திரிந்த 6 போ் கைது

திருவலஞ்சுழியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 போ் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


