தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் கைது

வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:35 am IST

வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

வில்லியனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட சாமியாா்தோப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் திருமுருகன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடாக மா்ம நபா்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரை கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், வில்லியனூரைச் சோ்ந்த வினோத்குமாா் (27), நுதேஷ் (23), கிஷோா் (22), சிவா (22) என்பதும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 150 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.