எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்! புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தல்!

News image

புதுச்சேரி... - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:58 am IST

தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவா் கொளஞ்சியப்பன், மாநில செயலா் அரிகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு 2000-ஆம் ஆண்டில் வெளியிட்ட அரசாணையின்படி, தந்தை வழி பூா்விகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஜாதிச் சான்றிதழ் வழங்குகிறது.

இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

தாய்வழி பூா்விகத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்தச் சாதகமான தீா்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல், அதனை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்தது மக்களுக்குச் செய்யும் அநீதியாகும்.

புதுச்சேரி அரசு இப் பிரச்னையில் மேல்முறையீடுகளைத் திரும்ப பெற வேண்டும். தாய்வழி ஜாதிச் சான்றிதழ் கிடைக்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.