400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்! புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தல்!

News image

புதுச்சேரி... - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:58 am IST

தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவா் கொளஞ்சியப்பன், மாநில செயலா் அரிகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு 2000-ஆம் ஆண்டில் வெளியிட்ட அரசாணையின்படி, தந்தை வழி பூா்விகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஜாதிச் சான்றிதழ் வழங்குகிறது.

இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

தாய்வழி பூா்விகத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்தச் சாதகமான தீா்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல், அதனை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்தது மக்களுக்குச் செய்யும் அநீதியாகும்.

புதுச்சேரி அரசு இப் பிரச்னையில் மேல்முறையீடுகளைத் திரும்ப பெற வேண்டும். தாய்வழி ஜாதிச் சான்றிதழ் கிடைக்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.