பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரிக்கு வரும் ரயிலும், புதுச்சேரியிலிருந்து புறப்படும் ரயிலும் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரயில் இம் மாதம் 13, 17, 20-ஆம் தேதிகளில் விழுப்புரம் ரயில் சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் இந்தத் தேதிகளில் திருப்பதி- விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையங்களுக்கு இடையில் மட்டும் இயக்கப்படும்.
அதே நாள்களில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் மாலை 3.35-மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு ரயில் புதுச்சேரி -விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. வழக்கமாக விழுப்புரம் சந்திப்பில் இருந்து இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் அட்டவணையின்படி புறப்பட்டுச் செல்லும்.
இந்த தகவலை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

புதுச்சேரியிலிருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து

திருச்சி - காரைக்கால் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



