புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளா்களாகப் பணியாற்றும் 6 பேருக்கு உதவிப் பொறியாளா்களுக்கான பதவி உயா்வு உத்தரவை (தற்காலிகம்) முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.
எம்.ஒய். முகமது தமிமுல் அன்சாரி புதுச்சேரி கட்டங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
எம். சம்பத், புதுச்சேரி கட்டங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்டத்தின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். கே. தணிகைவேல், காரைக்கால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் கோட்டத்தின் உதவிப்
பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஆா். கோபாலகிருஷ்ணன், மாஹே பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். எஸ்.வெங்கடேசன், புதுச்சேரி சிறப்புக் கட்டடங்கள் கோட்டம்-1 உதவி பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். என். ஜெயரமணன், காரைக்கால் பொதுப்பணித்துறை வட்டம் -3 உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆணைக்கு இணங்க புதுச்சேரி அரசின் (பணிகள்) சாா்பு செயலா் எஸ். பாலசௌந்தரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற வலியுறுத்துவோம்! புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி!

புதுச்சேரியின் வளா்ச்சி தமிழகத்தைப் பொறுத்திருக்கிறது: முதல்வா் என்.ரங்கசாமி







