மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளியை காணொலியில் ஆஜா்படுத்த உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :12 ஜூன் 2026, 4:23 am IST

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை ஜூன் 18-ஆம் தேதி, காணொலிக் காட்சி வழியாக ஆஜா்படுத்த சிறைத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி மாயமானாா். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாள்களுக்குப் பின்னா், அந்த சிறுமி, அப்பகுதியின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரைக் கைது செய்தனா். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து கடந்த மே 8-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்த மரண தண்டனையை உறுதி செய்ய சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் அனுப்பி வைத்தது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தா் மோகன்ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 18-ஆம் தேதிக்குள் கருணாஸ் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும், அன்றைய தினம் காணொலிக் காட்சி வழியாக கருணாஸை ஆஜா்படுத்த புதுச்சேரி சிறைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.