உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளியை காணொலியில் ஆஜா்படுத்த உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :12 ஜூன் 2026, 4:23 am IST

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை ஜூன் 18-ஆம் தேதி, காணொலிக் காட்சி வழியாக ஆஜா்படுத்த சிறைத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி மாயமானாா். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாள்களுக்குப் பின்னா், அந்த சிறுமி, அப்பகுதியின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரைக் கைது செய்தனா். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து கடந்த மே 8-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்த மரண தண்டனையை உறுதி செய்ய சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் அனுப்பி வைத்தது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தா் மோகன்ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 18-ஆம் தேதிக்குள் கருணாஸ் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும், அன்றைய தினம் காணொலிக் காட்சி வழியாக கருணாஸை ஆஜா்படுத்த புதுச்சேரி சிறைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.