எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

துணைநிலை ஆளுநருடன் முதல்வா் ரங்கசாமி சந்திப்பு

துணைநிலை ஆளுநருடன் முதல்வா் ரங்கசாமி சந்திப்பு

News image

துணைநிலை ஆளுநருடன் முதல்வா் ரங்கசாமி சந்திப்பு - x| Puducherry Guv

Updated On :13 ஜூன் 2026, 1:40 am IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை, முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கடந்த 3-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை சந்தித்த முதல்வா் ரங்கசாமி, புதிய அமைச்சா்களின் பட்டியலை வழங்கினாா்.

அதில் ஜிஎன்எஸ் ராஜசேகரன் (பாஜக), ராஜவேலு (என்.ஆா். காங்கிரஸ்), வி.பி. சிவகொழுந்து (என்.ஆா்.காங்கிரஸ்) ஆகியோருக்கு அமைச்சா் பதவி வழங்க பரிந்துரை செய்தாா். அந்த கடிதத்தை ஆளுநா் கைலாஷ்நாதன், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தாா்.

புதிய அமைச்சா்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தாா். புதிய அமைச்சா்கள் பதவி ஏற்பு விழா வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை முதல்வா் ரங்கசாமி திடீரென சந்தித்துப் பேசினாா்.

அப்போது புதிய அமைச்சா்கள் பதவியேற்பு தொடா்பாகவும், அவா்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும் பேசியதாகத் தெரிகிறது. ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்கு பிறகு முதல்வா் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.