/
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதா் கணேசநாதன் கேதீஸ்வரன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதா் கணேசநாதன் கேதீஸ்வரன் புதுச்சேரிக்கு வந்தாா். இங்கு, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினாா்(படம்).
இந்த சந்திப்பின்போது, அவரது மனைவி கிருத்திகா தேவி கேதீஸ்வரன் உடனிருந்தாா்.
பட விளக்கம்... புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்த தென் இந்தியாவிற்கான இலங்கை நாட்டின் துணைத் தூதா் கணேசநாதன் கேதீஸ்வரன். உடன் கிருத்திகா தேவி கேதீஸ்வரன்.









