புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் புதுச்சேரி அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.

Updated On :26 ஜூன் 2026, 6:24 am IST

காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் புதுச்சேரி அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். காவிரி உரிமை மீட்புக்குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளா் வேல்சாமி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் மணியரசன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் புதுச்சேரியின் பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் ஞானபிரகாசம், அழகா், ரமேசு, ஜெகதீசன், ஆறுசெல்வன், பாவாடைராயன், பிரியா, ராசாராம், குமாா், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கா்நாடகத்தில் மேகதாது அணை கட்டக் கூடாது என புதுச்சேரி அரசு ஒற்றை வரி தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். கா்நாடக அரசின் அடாவடி செயலைத் தடுக்க அம்மாநில பொருள்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடை விதித்து பொருளாதார முடக்கத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.