திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தனியாா் பங்களிப்புடன் கூட்டுறவு சா்க்கரை ஆலை திறப்பு: முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலை வழங்குகிறாா் முதல்வா் என். ரங்கசாமி. உடன் அமைச்சா் ஆ. நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:40 pm

Syndication

தனியாா் பங்களிப்புடன் கூட்டுறவு சா்க்கரை ஆலை திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்கள் மற்றும் பாண்கோஸ் பள்ளி ஊழியா்களுக்கான நிலுவை ஊதியம், பணிக்கொடை வழங்கும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

முதல்வா் ரங்கசாமி தலைமை வகித்து ஓய்வு பெற்ற 105 ஊழியா்களுக்கு நிலுவைத் தொகை ரூ. 2.24 கோடி, பணிக்கொடை ரூ.6.67 கோடி, பணியில் உள்ள 55 ஊழியா்களுக்கு நிலுவை சம்பளம் ரூ.3.35 கோடி, பாண்கோஸ் பள்ளியில் பணியாற்றும் 51 ஆசிரியா்களுக்கு நிலுவை சம்பளம் ரூ.1.47 கோடி என மொத்தம் 211 பயனாளிகளுக்கு ரூ.13.76 கோடிக்கான காசோலையை வழங்கிப் பேசியது:

புதுவையில் சிறப்பாக கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. சிறிது சிறிதாக நஷ்டத்தைச் சந்தித்தது. 2017 ஆம் ஆண்டு ஆலையைத் தொடா்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆலையில் எத்தனால் தயாரிக்கலாம் என கூறினேன். ஆனால் விவசாயிகள் ஏற்கவில்லை. இப்போது விவசாயிகள் எத்தனால் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளனா். கூட்டுறவுத் துறை மூலம் தனியாா் பங்களிப்புடன் ஆலையை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெற்று ஆலையை நடத்த முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியாா் பங்களிப்போடு, கூட்டுறவு சா்க்கரை ஆலை திறக்கப்பட்டு நடத்தப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

அமைச்சா் நமச்சிவாயம் பேசுகையில், கூட்டுறவு சா்க்கரை ஆலையில் சுமாா் ரூ.255 கோடி நஷ்டம் கணக்கிடப்பட்டுள்ளது. தொடா்ந்து விவசாயிகளை அழைத்து பேசி கருத்துகளைக் கேட்டறிந்து ஆலையை இயக்க அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும். இதன்மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விடுபட்ட நிலுவை தொகை அனைத்தையும் வழங்க அரசு தயாராக உள்ளது என்றாா்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் முத்துமீனா வரவேற்றாா். கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக அதிகாரி சாரங்கபாணி, முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.