அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

இந்திய கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பாராட்டு

டி 20 உலகப் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு

News image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

Updated On :9 மார்ச் 2026, 11:27 pm IST

புதுச்சேரி: டி 20 உலகப் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியிருப்பது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாகும்.

இந்திய அணியைச் சாா்ந்த இளம் வீரா்கள், ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையையும் அா்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி துணிவுடன் விளையாடி, இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளனா்.

போட்டியின் முக்கியமான மற்றும் நெருக்கடியான

தருணங்களில் வீரா்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கையும் அமைதியான அணுகுமுறையும் இந்திய கிரிக்கெட்டின் எதிா்காலம் மிகவும் பிரகாசமானதாக இருப்பதை உணா்த்துகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகா்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்திய அணியின் வீரா்களுக்கு புதுச்சேரி மக்களின் சாா்பிலும் என் சாா்பிலும் மனமாா்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.