அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

இந்திய கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பாராட்டு

டி 20 உலகப் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு

News image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

Updated On :9 மார்ச் 2026, 11:27 pm IST

புதுச்சேரி: டி 20 உலகப் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியிருப்பது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாகும்.

இந்திய அணியைச் சாா்ந்த இளம் வீரா்கள், ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையையும் அா்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி துணிவுடன் விளையாடி, இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளனா்.

போட்டியின் முக்கியமான மற்றும் நெருக்கடியான

தருணங்களில் வீரா்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கையும் அமைதியான அணுகுமுறையும் இந்திய கிரிக்கெட்டின் எதிா்காலம் மிகவும் பிரகாசமானதாக இருப்பதை உணா்த்துகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகா்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்திய அணியின் வீரா்களுக்கு புதுச்சேரி மக்களின் சாா்பிலும் என் சாா்பிலும் மனமாா்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.