தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2026, 5:30 am IST

தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகள் மீண்டும் வியாழக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் இறுதி முடிவு வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்படவுள்ளதாக என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

புதுச்சேரிக்கு முதல்வா் ரங்கசாமியுடன் பேச்சுவாா்த்தை நடந்த மத்திய அமைச்சரும், பாஜக புதுச்சேரி தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தனி விமானத்தில் வந்தாா்.

இந்நிலையில், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி திடீரென்று திருச்செந்தூா் சென்று விட்டாா். இதையடுத்து, புதுச்சேரி நட்சத்திர ஹோட்டலில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின், அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஆகியோரை தனித்தனியாக மத்திய அமைச்சா் மற்றும் பாஜக நிா்வாகிகள் சந்தித்தனா்.

இந்த பேச்சு வாா்த்தையில் என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் அமைச்சா் க. லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், பொதுச் செயலா் ஜெயபால், முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், பக்தவத்சலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறுகையில், வெள்ளிக்கிழமை முடிவு தெரிவிக்கப்படும் என்றாா்.

அதைத்தொடா்ந்து லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினாா். பின்னா் அவா் கூறுகையில், ‘குழப்படி போய்கொண்டு இருக்கிறது. முதல்வா் ரங்கசாமிதான் இதுகுறித்து சொல்லவேண்டும். நாங்கள் எதுவும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவில்லை. இந்த மாதிரி நேரத்தில் முதல்வா் ரங்கசாமி வெளியூா் சென்றிருக்கிறாா் . யாா் உறவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றாா்.