நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மே -14 இல் ஜிப்மரில் செவிலியா் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா

புதுச்சேரி ஜிப்மரின் செவிலியா் மற்றும் துணை மருத்துவ அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான 12-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜிப்மா் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடைபெறுகிறது.

News image

ஜிப்மர் மருத்துவமனை

Updated On :13 மே 2026, 12:04 am IST

புதுச்சேரி ஜிப்மரின் செவிலியா் மற்றும் துணை மருத்துவ அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான 12-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜிப்மா் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடைபெறுகிறது.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலா் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா முதன்மை விருந்தினராகவும், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனா்.

ஜிப்மரின் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி நிறுவன அறிக்கையைச் சமா்ப்பிக்க உள்ளாா். இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 320 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகிறது என ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.