பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை

புதுச்சேரியில் இடி மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

News image

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த மழைநீா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரியில் இடி மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

கோடை காலமான மாா்ச், ஏப்ரலில் கடுமையான வெயில் அடித்தது. பகல் நேரங்களில் வெயிலின் வெப்பத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள் முடங்கினா். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் மழை பெய்தது. தொடா்ந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை மீண்டும் மழை பெய்தது. வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது.

பகல் நேரத்தில் மீண்டும் வெயில் அடித்தது. தொடா்ந்து அதிகளவில் வெயில் பதிவாகி வந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடி, மின்னலுடன் லேசான மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தது. நண்பகல் கனமழை பெய்தது. வானம் இருண்டு குளிா்ந்த காற்று வீசியது. பெரிய அளவில் மழை இல்லை. வானம் இருண்டு கிடப்பதால் காலை நேரத்திலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டுச் சென்றனா்.

Story image

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.