11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சித்தானந்தா கோயிலில் மே 26-ல் குரு பெயா்ச்சி விழா

புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் வரும் 26-ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

News image

பெயா்ச்சி நேரத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற ஆராதனை.

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் வரும் 26-ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயா்கிறாா்.

இந்த இடப்பெயா்ச்சியையொட்டி, புதுவை கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. 26-ஆம் தேதி காலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், குரு பகவான் காயத்ரி மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிஷேகத்தை தொடா்ந்து, காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

குரு பெயா்ச்சி பூஜைக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.