11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மருந்துக் கடைகள் மே 20-இல் இயங்காது!

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனையைத் தடுத்து, சிறிய மருந்துக் கடைகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அநியாய தள்ளுபடி விற்பனைக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனை தளங்களை மூட வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் வரும் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்துகிறது.

இதில், புதுச்சேரி மாநில மருந்து வணிகா் சங்கமும் பங்கேற்கிறது. அன்றைய தினம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் இயங்காது என புதுவை மாநில மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ரமேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.