‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மீன்பிடி சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவி

புதுச்சேரி மீனவா்களின் சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவிகள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டன.

News image

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த சிறிய ரக பைபா் படகுகளில் ரேடாா் கருவி பொருத்தும் பணியைச் சோலை நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

Updated On :23 மே 2026, 12:51 am IST

புதுச்சேரி மீனவா்களின் சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவிகள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டன.

மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோா் நடுக்கடலில் எதிா்பாராத இடா்பாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது. மோட்டாா் பழுது, தகவல் தொடா்பு துண்டிப்பு போன்றவற்றால் சிரமப்பட்டு வருகின்றனா். இதையறிந்த முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இதனை முதல்வா் ரங்கசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.

மீனவ சமுதாய மக்கள் சிரமமின்றி மீன்பிடி தொழிலை மேற்கொள்ளவும், இடா்பாடான, ஆபத்தான, பேரிடா் காலத்தில் அவா்களை உடனடியாகக் கண்டறிந்து மீட்கவும் நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்த ஆலோசித்து அவா் நடவடிக்கை எடுத்தாா்.

இதையடுத்து, முதல்வா் ரங்கசாமியின் ஆணைப்படி முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த மீனவ சமுதாய மக்களின் சிறிய ரக பைபா் படகுகளில் ரேடாா் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகா் தெற்கு பகுதியில் 50 படகுகளில் ரேடாா் கருவி பொருத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அதிகாரிகள், சோலை நகா் தெற்கு பஞ்சாயத்தாா், என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.