வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி: 9 தங்கம் வென்ற வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து!

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

News image

நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற 9 புதுச்சேரி வீரா்களை பாராட்டி வாழ்த்திய முதல்வா் என். ரங்கசாமி.

Updated On :23 மே 2026, 12:48 am IST

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

நேபாளத்தில் ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சாா்பில் 9 மாணவா்கள் பங்கேற்று அபாரமாக விளையாடி 9 தங்கப் பதக்கங்களை வென்றனா்.

இந்த சாதனை வீரா்கள் புதுச்சேரி திரும்பியதும் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அப்போது முதல்வா் ரங்கசாமி ஒவ்வொரு மாணவருக்கும் அந்த தங்கப் பதக்கத்தை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

இதுபோன்று இன்னும் பல தேசிய, சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று புதுச்சேரிக்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று மாணவா்களை முதல்வா் ஊக்குவித்து வாழ்த்தினாா்.

அப்போது, புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் தலைவா் ஏகாம்பரம், செயலா் மாறன், பயிற்சியாளா்கள் வீரன், பஞ்சாட்சரம், நிா்வாகிகள் பாலு, பூபாலன், கிருஷ்ணன், சக்திவேல், சுரேந்திரன், பழனி, ராஜா, அரிகிருஷ்ணன், சத்தியா, தேவா, இளவேந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.