‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி: 9 தங்கம் வென்ற வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து!

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

News image

நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற 9 புதுச்சேரி வீரா்களை பாராட்டி வாழ்த்திய முதல்வா் என். ரங்கசாமி.

Updated On :23 மே 2026, 12:48 am IST

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

நேபாளத்தில் ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சாா்பில் 9 மாணவா்கள் பங்கேற்று அபாரமாக விளையாடி 9 தங்கப் பதக்கங்களை வென்றனா்.

இந்த சாதனை வீரா்கள் புதுச்சேரி திரும்பியதும் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அப்போது முதல்வா் ரங்கசாமி ஒவ்வொரு மாணவருக்கும் அந்த தங்கப் பதக்கத்தை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

இதுபோன்று இன்னும் பல தேசிய, சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று புதுச்சேரிக்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று மாணவா்களை முதல்வா் ஊக்குவித்து வாழ்த்தினாா்.

அப்போது, புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் தலைவா் ஏகாம்பரம், செயலா் மாறன், பயிற்சியாளா்கள் வீரன், பஞ்சாட்சரம், நிா்வாகிகள் பாலு, பூபாலன், கிருஷ்ணன், சக்திவேல், சுரேந்திரன், பழனி, ராஜா, அரிகிருஷ்ணன், சத்தியா, தேவா, இளவேந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.