வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதுச்சேரியில் ரூ.200 கோடி வா்த்தகம் பாதிப்பு

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுத்துறை வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுத்துறை வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.

Published On :

வங்கி ஊழியா்கள் போராட்டத்தால் புதுச்சேரியில் சுமாா் ரூ.200 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் புதுச்சேரியில் உள்ள 160-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரம் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை.

இதனால் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், காசோலை பரிவா்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏடிஎம்களில் பணம் தீா்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். வேலையைப் புறக்கணித்த வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் யூகோ வங்கி அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை வழங்க வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், வங்கிகளில் போதிய எழுத்தா், உதவிப் பணியாளா்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் எச்சரித்துள்ளனா்.

புதுச்சேரியில் வங்கி ஊழியா்கள் போராட்டத்தால் சுமாா் ரூ. 200 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வழக்கம் போல இயங்கின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.