மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பேர் கைது

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :21 மார்ச் 2017, 6:18 am

தினமணி

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் நகர உதவி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை காலை விழுப்புரம் முத்தோப்புப் பகுதியில் உள்ள குளிர்பானக் கடையில் ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப் பொருள் விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக விழுப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த அஸ்ரப் அலி (38) என்பவரை கைது செய்து, 6 பாக்கெட்டுகளில் இருந்த மாவாவை பறிமுதல் செய்தனர்.
 அதே போல விழுப்புரம் வடக்குத் தெரு பகுதியில் கடையில் தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப் பொருளை விற்பனை செய்ததாக பக்கீர் முகமது (60) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.