சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லாரி மீது கார் மோதல்: ஓய்வு பெற்ற ஆட்சியர் காயம்

சின்னசேலத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆட்சியர், அவரது மனைவி ஆகியோர் காயமடைந்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:07 am

தினமணி

சின்னசேலத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆட்சியர், அவரது மனைவி ஆகியோர் காயமடைந்தனர்.
 சென்னையைச் சேர்ந்த நைனாமலை மகன் கோவிந்தன்(60). கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், புதன்கிழமை சென்னையிலிருந்து, நாமக்கல் நோக்கி காரில் சென்றார். இரவு 9 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் புறவழிச்சாலை அருகே சென்றபோது, அதே சாலையில், முள்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில், கோவிந்தன், அவரது மனைவி தேன்மொழி(50). கார் ஓட்டுநர் ஆறுமுகம், ஆகியோர் காயமடைந்தனர். உடனே அவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, முதலுதவிக்குப் பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து, சின்னசேலம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.