விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் ஏ.வி.அருணாகுமாரி வரவேற்றார். கல்விப் பிரிவு புலமுதன்மையர் ஸ்ரீதேவி கல்லூரி வளர்ச்சி அறிக்கை தாக்கல் செய்தார். ஆசிரியைகள் ஸ்ரீஜா, உத்திரா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ஏ.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.செந்தில்குமார், இ.எஸ்.கல்விக் குழும பதிவாளர் கஸ்தூரிபாய் தனசேகரன், துணைப் பதிவாளர் சௌந்திரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் வி.பெருவழுதி, மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான நெறிமுறைகள், வேலைக்கான நேர்காணலை அணுகும் முறை, நூலகத்தின் பயன்பாடு, திறனாய்தலின் தேவை, கற்றலின் அவசியம், நற்சிந்தனைகள் போன்றவை குறித்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழாண்டில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகள் சந்தியா, தெய்வானை ஆகியோருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
சிறந்து விளங்கிய உயிர் வேதியியல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர். விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


