மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:30 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அமைக்காமல் அரசியல் ஆதாயத்துக்காக செயல்பட்டு வரும் மத்திய, கர்நாடக மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தீர்மானங்களை நிறைவேற்றி, ஏப்.3 முதல் ஏப்.5 வரை விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.சங்கரன், பொருளாளர் ஏ.அன்பழகன், வழக்குரைஞர்கள் ராஜாராமன், லூசியா, முத்துக்குமார், மணிகண்டன், பவானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.