செஞ்சி அருகே கோயில் விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர்.
செஞ்சி அருகே பாடிபள்ளம் அடுத்த தின்னலூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: சென்னாலூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்துக்கு அருகில் காளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளாக தின்னலூர் கிராமத்தினர் மூலம் நிர்வகித்து, உற்சவம், வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
தற்போது, பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்த நிலையில், அந்தக் கோயிலில் சென்னாலூர் காலனியைச் சேர்ந்த சிலர் உற்சவம் செய்ய வேண்டும் என பிரச்னை செய்கிறார்கள். இது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
தற்போதைய நிலையால், அங்கு அமைதி சீர்குலையும் நிலை உள்ளது. ஆகவே, விசாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?

கும்ப ராசிக்கு அனுகூலம்: இன்றைய ராசி பலன்கள்!

திரைப்படக் கல்வியின் அவசியம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
