திருக்கோவிலூர் பேரூராட்சி சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் ஐந்துமுனைச் சந்திப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட இப்பேரணியில், கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன் தொடக்கி வைத்தார். நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கியும், நெகிழியைத் தவிர்க்க வலியுறுத்தியும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியை, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன் உள்பட பலர் வழி நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

சீனு ராமசாமியின் இடிமுழக்கம் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள்! வெளியீடு எப்போது?

உறுதியானது பிளாக் பாந்தர் 3..! புதிய நாயகன், வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
திமுகவை வழிநடத்த யாருக்குத் தகுதி உள்ளது? உதயநிதியா? கனிமொழியா? நிர்மல் குமார் கேள்வி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


