சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம், துரிஞ்சிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வீதியோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம், துரிஞ்சிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வீதியோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது.
 இந்தக் கூட்டத்தில் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ பங்கேற்று, கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.
 அப்போது, வீதிகளில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும். தனிநபர்கள் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி, அனைத்து வீதிகளிலும் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
 வட்டாட்சியர் ப.செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் ஏழுமலை, ஊராட்சிச் செயலர் கே.மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.