ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

மதுக் கடத்தல்: 960 மதுப் புட்டிகள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:55 am IST

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  
இந்த நிலையில், விழுப்புரம் அருகேயுள்ள வாக்கூர் கூட்டுச் சாலைப் பகுதியில் மதுவிலக்கு போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால், அந்த வாகனத்தில் வந்த 2 பேர், வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பியோடினர்.  இதையடுத்து, போலீஸார் வாகனத்தை சோதனையிட்டதில், அதில் 960 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.