விக்கிரவாண்டி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்(48). விவசாயி. இவர், சனிக்கிழமை விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் பகுதியில் விஸ்வநாதன் என்பவரது சவுக்கு தோப்புக்கு வந்தார். அப்போது, டிராக்டரில் அமர்ந்து பயணித்துள்ளார். டிராக்டரை பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணி (45) என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது, டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்தார். பின்னால் வந்த டிரெய்லர் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே வெங்கேடசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு

மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


