சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

அரசியல் கட்சியினரின் புகாரைத் தொடர்ந்து, சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதி ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Updated on
1 min read

அரசியல் கட்சியினரின் புகாரைத் தொடர்ந்து, சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதி ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சின்னசேலம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கணபதி. இந்த காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வாகனத் தணிக்கை என்ற பெயரில், முறைகேடுகள் செய்து, லஞ்சம் பெறுவதாகவும், பொதுமக்களை கடும் வார்த்தைகளால் பேசுவதாகவும், அரசியல் கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை சந்தித்து, காவல் ஆய்வாளர் கணபதி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதி மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.க்கு பரிந்துரைத்தார். 
இதனை பரிசீலித்த டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதியை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com