வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மனநிலை பாதித்த இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கள்ளக்குறிச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :29 மார்ச் 2018, 3:58 am

கள்ளக்குறிச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு சாலையைச் சேர்ந்த வி.கருணாமூர்த்தி மகன் சரவணன் (56). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்து கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் இவர் உடல் நலம் பெறவில்லை.இந்த நிலையில், சரவணன் புதன்கிழமை பிற்பகல் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் ஏறி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றவைத்துக் கொண்டு கீழே குதித்துவிட்டார்.
 இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.