கள்ளக்குறிச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு சாலையைச் சேர்ந்த வி.கருணாமூர்த்தி மகன் சரவணன் (56). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்து கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் இவர் உடல் நலம் பெறவில்லை.இந்த நிலையில், சரவணன் புதன்கிழமை பிற்பகல் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் ஏறி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றவைத்துக் கொண்டு கீழே குதித்துவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

