ரிஷிவந்தியம் அருகே பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ரிஷிவந்தியத்தை அடுத்த அரியலூர் கிராமத்தில் உள்ள பார்வதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராணி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது.
சில மாதங்களாகவே பூட்டியே கிடக்கும் இந்த வீட்டின் முன்பக்கத்தில், பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் அழுகிய நிலையில் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸார் உடலை மீட்டு, உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








